தமிழகத்தில் இன்று
ஜூலை 26-ல் கார்கில் போர் வெற்றி தினம்
டெல்லி:
கார்கில் போரின் வெற்றி தினம் வரும் 26-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அன்றைய தினம்நாடு அஞ்சலி செலுத்தும்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ஜவான்கள் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துவார்கள்.
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி இந்தியா கேட்டில் சிறப்பு கண்காட்சியும் நடத்தப்படும். இக் கண்காட்சியில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்டமிக்-23, மிக்-21, எம்ஐ-17, மிராஜ்-2000 ரக போர் விமானங்களும், செடாக் ஹெலிகாப்டர், சீட்டா ஹெலிகாப்டர் ஆகியவையும் இடம் பெறும்.
போஃபர்ஸ் பீரங்கி, ரேடார் கருவிகள், ஏவுகணைகள் ஆகியவையும் வைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டபொருட்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
முஷ்கோ, படாலிக், யெல்டோர், கச்சார் ஆகிய இடங்களில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கண்காட்சியில்இடம்பெறும். விமானங்கள் வானில் அணிவகுத்துப் பறக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும் கார்கில் போரில் உயிர் நீத்த ஜவான்களின் நினைவாக மாலை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்.