தமிழகத்தில் இன்று
சிட்னி ஒலிம்பிக்: துப்பாக்கி பயன்படுத்த வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை
கான்பரா:
சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு அணியினருக்குப் பாதுகாப்பாக அந் நாட்டின் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதியில்லை என்று ஆஸ்திரேலியாதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனர் டேரில் வில்லியம்ஸ் கூறியதாவது:
சிட்னி நகரில் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில்175-க்கும் அதிகமான நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள் அமைதியாகவும், நல்லபடியாகவும் நடைபெறுவதற்கானஅனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆகவே, வெளிநாட்டு அணியினருக்குப் பாதுகாப்பாக அந் நாட்டு பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.
பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் போன்றஅனைத்து நாடுகளின் பாதுகாப்புப் படையினருக்கும் இத் தடை பொருந்தும் என்றார்வில்லியம்ஸ்.
துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஈரான், ஈராக் உள்ளிட்ட 12 நாடுகள்,தங்களது நாட்டு அணிக்குப் பாதுகாப்பாக வரும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிவைத்துக் கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரியுள்ளதாக பத்திரிக்கைகளில்செய்தி வெளியாகின.
இதையடுத்து மேற்கண்ட விளக்கத்தை வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுஅணியினருடன் அந்த நாடுகளின் பாதுகாப்புப் படையினர் வரலாம். ஆனால்,ஆஸ்திரேலியாவில் அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லைஎன்றார் அவர்.