தமிழகத்தில் இன்று
பலரின் "மனசை கொய்த (பறித்த) மனிஷா கொய்ராலா அண்மையில் ஒய்வு எடுப்பதற்காக தன் சொந்த ஊரான நேபாளம் சென்றார். அங்கு காதல்வலையில் சிக்கிக் கொண்டாராம்.
காதலனுடைய பெயர் கிறிஸ். இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை நேபாளத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கான தூதராகஇருக்கிறாராம்.
பெற்றோரைப் பார்க்க விடுமுறையில் வந்த கிறிஸ்சுக்கும் மனிஷாவுக்கும் காதல் மலர்ந்துவிட்டது. தினமும், கிறிஸ் நினைவிலேயே தூங்கி அவர்நினைவிலேயே விழிக்கிறாராம் மனிஷா.
விசாரித்தால் நான் எப்படி இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார் இந்த அழகான ராட்சசி. இது தான் காதல் என்பதா..!
மயக்கத்தில் கோடம்பாக்கம்
குஷியில் கவர்ச்சியாக "கட்டிப்புடிச்சு" ஆடிய நடிகையின் மேனேஜர் ஒரு சில கண்டிஷனுடன் தயாரிப்பாளர் டைரக்டர்களை ரகசியமாக சந்தித்துப் பேசினார். விளைவு,இப்போது இரண்டு படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே மும்பையில் குரூப் நடனங்களில் ஆடத்தொடங்கி, பின்னர் டான்ஸ் மாஸ்டர்களின் உதவியாளராக இருந்து தான் பெற்ற அனுபவங்களுடன், இந்தநான்கெழுத்து நடிகை நம் ஊர் தயாரிப்பாளர்களை ஈஸியாக சமாளித்து சரி செய்துவிடுகிறாராம்.
சொந்தமாக நடிகை சென்னையில் வீடு பார்க்கக் கூடத் தொடங்கிவிட்டார். எல்லாம் மேனேஜரின் ஏற்பாடுதானாம். கோடம்பாக்கத்தில் பலர்மயக்கத்தில் இருப்பதாக செய்தி.












Click it and Unblock the Notifications