களை கட்டுகிறது இலங்கைத் தேர்தல் களம்
கொழும்பு:
ஒரு பக்கம் துப்பாக்கிகள் முத்தக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மறு பக்கம், இலங்கைத் தேர்தல் களம் சுறுசுறுப்பாகவே காணப்படுகிறது.
அக்டோபர் 10-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள்,உடன்பாடுகள் முடிந்து கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தைத் துவங்கியுள்ளன.
சண்டைக் களமான யாழ்ப்பாணத்திலும் தேர்தல் விறுவிறுப்படையத் துவங்கியுள்ளது. இதுவரை 18 அரசியல்கட்சிகள் மற்றும் நான்கு சுயேச்சைக் குழுவினர்வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்தத் தேர்தல் குறித்து "விடுதலைப்புலிகள் தரப்பில் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதைய பெரும் கேள்விக்குறியாகஉள்ளது. தேர்தல் குறித்து அவர்கள் இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. புலிகளின் மெளனம் அபாயகரமானது என்பதை உலகமே அறியும்என்பதால் அவர்களின் அமைதி பீதியைக் கிளப்பும் விதமாக உள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், புலிகள் அமைதியாக இருப்பது புயலுக்கு முந்தைய அமைதி போலத் தோன்றுகிறது என்றார்.
கடந்த நான்கு நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்க, நெருங்க புலிகளின் ரியாக்ஷனும், தேர்தலின் தலைவிதியும் தெரிய வரும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications