விரைவில் விடுதலையாக உதவுங்கள் .. ராஜ்குமார்
பெங்களூர்:
வீரப்பன் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி நான் விரைவில் விடுதலையாக உதவவேண்டும் என நடிகர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடந்த மாதம் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர்ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சென்றுள்ள நக்கீரன்ஆசிரியர் கோபால் தமிழக முதல்வருக்கு வீடியோ கேசட் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் ராஜ்குமார் கர்நாடக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழகமுதல்வர் அதை கர்நாடக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். ராஜ்குமார் தனதுவேண்டுகோளில் கர்நாடக முதல்ருக்கு கூறியிருப்பதாவது:
காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கஉறுதியளித்திருப்பதாக அறிந்தேன். அந்த நிவாரணத்தை விரைவாக வழங்கினால்தான்நாங்களும் விரைவாக விடுதலை ஆக முடியும்.
நான் நலமுடன் இருக்கிறேன். நன்கு ஓய்வு எடுத்து வருகிறேன். கர்நாடக மக்கள்தொடர்ந்து அமைதி காக்க வேண்டும். நான் விடுதலை அடைந்த பின்பு கர்நாடகத்தில்உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.அது போன்ற அசம்பாவிதம் நடை பெறாமல் அமைதியுடன் இருக்க வேண்டும் என்றுஅவர் பேசியுள்ளார்