வீண் விவாதம் வேண்டாம் .. கட்சிகளுக்கு லத்தீப் அறிவுரை
சென்னை:
ஆட்சி அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீண் விவாதம் செய்யக்கூடாது என்று லத்தீப் கூறினார்.
இந்திய தேசீய லீக் மாநிலத் தலைவர் லத்தீப் எம்.எல்.ஏ. மதுரையில் நிருபர்களைசந்தித்தார். அவர்களிடம் லத்தீப் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள்மத சார்பற்ற அணி பலம் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்திய தேசீயலீக்கின் விருப்பம்.
தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது யார் என்றும், கூட்டணி ஆட்சி அமைப்போம்,தனித்து ஆட்சி அமைப்போம் எனறும் ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமேகூட்டணி என்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீண் விவாதம் செய்யக்கூடாது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 37 ஆண்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க.கட்சிகள்தான் மாறி மாறி ஆளும் கட்சிகளாக இருந்து வந்துள்ளது. இருந்தாலும்,ஆட்சிஅமைப்பது தொடர்பான விவாதங்கள் இப்பொழுது தேவையில்லை என்று லத்தீப்கூறினார்.












Click it and Unblock the Notifications