வீரப்பன் விவகாரம்: தாமரைக்கனிக்கு பல சந்தேகங்கள்...
சென்னை:
வீரப்பன் பிரச்சனை பற்றி விவாதிக்க தமிழக சட்டமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என்று அதிமுகஎம்.எல்.ஏ. தாமரைக்கனி கூறியுள்ளார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தமிழக கவர்னர் பாத்திமா பீவி, சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்ஆகியோருக்கு அ.தி..க எம்.எல்.ஏ தாமரைக்கனி அனுப்பியுள்ள கடிதத்தில்,
கர்நாடக நடிகர் ராஜ்குமாரையும் மற்றும் மூன்று பேரையும் கடத்தி வைத்துள்ள சந்தன மரக்கடத்தல் வீரப்பன்பிரச்சனையில் தமிழக - கர்நாடக அரசுகள் அரசியல் ஆதாயம் தேடும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூட்டிஇருக்கிறார். ஆனால் தமிழக தல்வர் கருணாநிதி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இன்னும் கூட்ட முன்வராதது பல்வேறு சந்தேகங்களை தமிழ்நாட்டில் உள்ள பொது மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராஜ்குமாரும் அவருடன் சேர்ந்து கடத்தப்பட்ட மற்ற மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்படவேண்டும்என்பதில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. இதற்காக கருணாநிதியும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் மேற்கொண்டநடவடிக்கைகள் மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு சார்பு இல்லாத ஒருவரான நக்கீரன் கோபாலை அனுப்புவதும், பயங்கர குற்றவாளியான தடா கைதிகளைவிடுவிப்பது என்பதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே வீரப்பன் பிரச்சனையில் தீர்வு ஏற்படாமல் இருக்கவும், தடா கைதிகளை விடுவித்து நாட்டில்தீவிரவாதத்தை பரப்பவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கவும் தமிழக, கர்நாடகஅரசுகள் தயாராகிவிட்டன.
இவர்களுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த தடா கைதிகள்விடுதலை மற்றும் நடிகர் ராஜ்குமார் விவகாரம் கை கொடுக்கும் என்று கர்நாடக அரசும், தமிழக முதல் அமைச்சர்கருணாநிதியும் கணக்கு போடுகிறார்கள்.
தனது செயல்பாட்டில் நேர்மை இருக்குமானால் இந்த பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்கூட்டி கருணாநிதி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். வீரப்பன் பிரச்சனை சம்பந்தமாக சட்டமன்றத்தின்சிறப்புக் கூட்டத்தை கூட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவர்னரை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் தாமரைக்கனி.