அசாம் மிளகாய் அது காரமுங்க ...!

Subscribe to Oneindia Tamil

தேஜ்பூர் (அசாம்):

அசாம் மாநிலத்தி விளையும் மிளகாய்தான், உலகிலேயே அதிக காரம் உடைய மிளகாயம் என்று தெரிய வந்துள்ளது.

அசாம் மாநிலம் தேஜ்பூரிலுள்ள பாதுகாப்பு ஆய்வுக் கழகமும், குவாலியரிலுள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமும் இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு ஆய்வகத்தின் துணை இயக்குனர் தாஸ் தெரிவிக்கையில், தேஜ்பூரில் உற்பத்தியாகும் மிளகாய்கள் நாக ஜோலாகியா என அழைக்கப்படுகின்றன.இவைதான் உலக அளவில தயாராகும் மிளகாய்களிலேயே காரமானது.

மிளகாயின் கார அளவை அறிய உதவும் ஸ்கோவில் ஸ்கேல் என்ற கருவி மூலம் இந்த மிளகாயின் கார அளவு 855 என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோவில் உற்பத்தியாகும் அதிக காரம் உடையதாகக் கருதப்படும் மிளகாயான "ரெட் சேவிங் என்னும் மிளகாயின் கார அளவு 577 என்றும்ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றார்.

இதுதொடர்பாக பைடல் மாதுர், காங்கி, தாஸ் மற்றும் மல்கோத்ரா ஆகிய நான்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 55 மெட்ரிக் டன் மிளகாய் ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு 80 கோடி ரூபாய் வ ருவாய் கிடைக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+