For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரசுடன் இணைந்தால் மூப்பனார் கேட்கும் பதவிகள் கிடைக்கும்: குமரியார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக கோவையில் குமரி அனந்தன் தெரிவித்தார்.

கோவை, பன்னிமடை என்ற இடத்தில் நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன், நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சித் தலைமை, தமிழ் மாநில காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாஎன்பது குறித்து மூப்பனார் சந்தேகத்தில் உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மூப்பனார் கேட்கும் பதவிகளைப்பெற்றுத் தர முயல்வேன். காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பதற்குத் தேவையான அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளப்படும்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை மனிதாபிமான அடிப்படையில் வீரப்பன் விடுவிக்க வேண்டும். ராஜ்குமாரைக் கடத்திச்சென்று காவிரி நீர் பெற்றுத் தருவதாக வீரப்பன் கூறியுள்ளார். ஆனால், தற்போதைய கடத்தலால் கர்நாடகத்தில்உள்ள தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் வீரப்பன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை விடுவிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று தான்வீரப்பனைப் போலீசார் பிடிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பூலான் தேவி கூட 11 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகே பொது வாழ்விற்கு வந்துள்ளார். பல கொலைகளைச்செய்துள்ள வீரப்பனை, ஜனாதிபதியே கூட மன்னிக்க முடியாது.

நக்கீரன் கோபால் செல்லும் இடத்திற்கு உளப்பிரிவு செல்ல இயலவில்லையென்றால், அது உளவுத் துறை அல்ல,உதவாத் துறை தான். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் பலருக்கு ஆறுதலாக இருக்காது என குமரி அனந்தன்தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X