For Daily Alerts
Just In
இலக்கை நெருங்குகிறார் நரேன் கார்த்திகேயன்
சென்னை:
பிரிட்டிஷ் பார்முலா-3 கார் பந்தயத்தில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் டிரைவராகவேண்டும் என்ற ஆசையில் உள்ள கார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை நடந்த பந்தயத்தில் 9-வது இடம்பிடித்தார்.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் அவர் 5-வது இடத்தில் உள்ளார். இதனால் பார்முலா-1 டிரைவராகும் நரேன் கார்த்திகேயனின் கனவு விரைவில்நனவாகும் என்று அவரது ஸ்பான்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் கடைசியில் நடைபெற உள்ள போட்டியில் இச் சாதனையை கார்த்திகேயன் எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, September 4, 2000, 5:30 [IST]