எச்.பி.எப் தொழிற்சாலையை சீரமைக்க இறுதி வாய்ப்பு
ஊட்டி:
ஊட்டி, எச்.பி.எப். தொழிற்சாலையை மறு சீரமைப்பு செய்ய அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிக்க இந்திய தொழிற்சாலைகளின் மறு சீரமைப்பு மற்றும் நிதிக்கமிட்டி முடிவு செய்துள்ளது.
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஆசியாவிலேயே போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்யும் ஒரே தொழிற்சாலையாகஉள்ளது.
இந்தத் தொழிற்சாலை கடந்த பல ஆண்டுகளாக நலிவடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. அரசு நிறுவனமான இந்தத் தொழிற்சாலையால் அரசுக்குபல கோடி ரூபாய் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடனாக மட்டும் இத் தொழிற்சாலை549 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இந்தத் தொழிற்சாலையை மறு சீரமைப்பு செய்ய இந்திய தொழிற்சாலைகளின் நிதி மற்றும் மறு சீரமைப்புக் கழகம் (பி.ஐ.எப்.ஆர்) ஆய்வு செய்தது. கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வில், இத் தொழிற்சாலையை சீரமைக்க இயலாது, மூடி விடலாம் என முடிவு செய்து அரசுக்கு சிபாரிசு செய்தது.
அப்போதைய அரசு விடாமல் தொடர்ந்து நடத்தியது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு வழியே இல்லை, மூடித்தான் ஆக வேண்டும் எனஇந்நிறுவனம் முடிவு செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இத் தொழிற்சாலையை மூட அனுமதி கோரி பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிட்டது.
தற்போது, தொழிற்சாலையை மறு சீரமைப்புச் செய்து கொள்ள அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிப்பதாக சீரமைப்புக் கழகம் அறிவித்துள்ளது. இந்த முடிவைஅனைத்து தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன. ஆனால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு, தொழிற்சாலையை மூடுவதைதற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications