விவசாயியின் வறுமை எப்போதும் மாறாது .. ராமதாஸ்
ஈரோடு:
பசுமைப் புரட்சி ஏற்பட்டாலும், வெண்மைப் புரட்சி ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குவறுமையே மிஞ்சுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்குபல்வேறு நலத் திட்டங்களை அளிக்கும் என ராமதாஸ் பேசினார்.
ஈரோடு மாவட்டம், பவானியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி மாநாட்டில் பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசியதாவது:
பசுமைப் புரட்சியாலும், வெண்மைப் புரட்சியாலும் விவசாயிக்கு எந்த நன்மையும்இல்லை. இதனால் பயனடையப் போவது நாடு மட்டுமே. விவசாயியின் வறுமைஎப்போதும் மாறாது.
கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலையே இல்லை.கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயி, அதன் கொள்முதல் விலையை நிர்ணயிக்கமுடியவில்லை.
டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பல காலமாகவிவசாயிகள் போராட்டம் நடத்தினாலும், இதில் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை.
இதே போன்ற சூழ்நிலைதான் மற்ற விலை பொருட்களுக்கும் நிலவி வருகிறது. இதுநீடித்தால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர முடியும்?.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளிக்கும்.
நெல்லுக்கு நல்ல விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், இலவச மின்சாரம் வழங்கவேண்டும் என முதன் முதலில் கோரிக்கை வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.திருவாண்ணாமலையில் செப்டம்பர் 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் விவசாயிகளின்பிரச்னைகள் விரிவாக விவாதிக்கப்படும்.
இக் கூட்டத்திற்கு மத்திய விவசாய அமைச்சர் நிதிஷ்குமார், மாநில வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்ஆகியோரை அழைத்துள்ளோம். இங்குவிவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.
நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை நெசவாளிகளுக்கு வாரத்திற்கு மூன்று நாாட்கள்வேலை இருப்பதே கடினமான காரியமாக உள்ளது. இவர்கள் உற்பத்தி செய்யும்துணிகளை விற்க முடிவதில்லை.
வெளிநாட்டிலிருந்து பருத்தி, நூல் உட்பட பொருட்களை இறக்குமதி செய்வதையும்,இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இவைகளை ஏற்றுமதி செய்வதையும் அரசு தடைசெய்ய வேண்டும். அப்போது தான் நெசவாளர்களின் நலன் காக்கப்படும்.
ராஜிவ் காந்தி இறந்த பிறகு, இலங்கைப் பிரச்னை குறித்து எந்தக் கட்சியுமேவாய்திறக்கவில்லை. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்று மட்டுமே சென்னையில்மாநாடு நடத்தி, தமிழர்களின் நலனுக்கு குரல் கொடுத்தது.
பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைக் காக்கபாடுபட்டு வருகிறது. எனவே, பொதுமக்களிடையே பாட்டாளி மக்கள் கட்சிஆதரவைப் பெற்று வருகிறது என ராமதாஸ் பேசினார்.