For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேசன் அரிசியால் 1,863 கோடி ரூபாய் இழப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

ரேஷன் கடையில் விலை குறைவாக அரிசி வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1,863 கோடிரூபாய் இழப்பு ஏற்படுகிறது என தமிழக உணவுத்துறைஅமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 140 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் விழா, கருணைஅடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.

விழாவில் பேசிய உணவுத்துறை மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் நிேரு,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழக அரசு 1,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அதே நேரம் 11 ரூபாய்க்கு விற்கவேண்டிய அரிசியை3.50 க்கு விற்பதால் இவ்வளவு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஒரு கிலோ நெல் 5.70 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அரவைக்குப் பின் 68 சதவீதம் அரிசி கிடைக்கும். செலவு 35 பைசா ஆகிறது. எனவேஅரிசி விலை ரூபாய் 6.05 ஆகும். ஆனால் கிலோ 3.50 க்குத்தான் கொடுக்கிறோம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் லாபத்தை அதிகரிக்க உமியிலிருந்து உயிர் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு40 கோடிரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் மூலம் 25 சதவீதம் விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இத்துறையில் பல மாற்றங்கள்கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X