இது தாங்க அரசியல்: பள்ளிகள் சார்பில் ஒரு கட்சி !
கோவை:
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கத்தினர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆங்கிலப் பள்ளிகளின் உரிமையாளர்கள் இணைந்து, தமிழ் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்என்ற அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின்பொதுச் செயலராகத் தேர்வு பெற்ற பி.டி குமார் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக அரசியலில் சாதி வாரியான கட்சிகள் அரசியல் நடத்த முடிவு செய்து தனிக் கட்சிகள் தொடங்கிவருகின்றன. நாட்டில் மதவாதம், பிரிவினை வாதம், தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.
அரசியலில் படித்த சான்றோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் குற்றவாளிகளின்ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தற்போதுள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையைகிழிக்கவும், இவர்களைப் பற்றி ஆதாரத்துடன் மக்களிடம் எடுத்துச் சொல்லவும் தனிக் கட்சி தொடங்க உள்ளோம்.
தமிழ்நாடு தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின் சங்கம் தொடங்கும் இக்கட்சியினால் கல்விப் பணி எவ்விதத்திலும்பாதிக்கப்படாது.
இந்தப் புதிய கட்சியின் பெயர் டெல்லியில் செப்டம்பர் 25ம் தேதி பதிவு செய்யப்படும்.கொடி, சின்னம் மற்றும்கொள்கைகள் அனைத்தும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
குமரி முதல் சென்னை வரை அனைத்து மக்களிடம் எங்களது கொள்கைகளை விளக்கி கூறி ஆதரவு திரட்டஉள்ளோம்.
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி வைப்போம்.வெற்றி பெற்றால், ஏழை எளியமக்களுக்குப் பணியாற்றுவோம். வேலையில்லாப் பட்டதாரிகள் பயன் பெறும் வகையில் தொழிற்சாலைகளைஉருவாக்குவோம். சக விரோதிகளை இனம் கண்டு நேரடித் தண்டனை வழங்குவோம்.
தற்போது வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு விஞ்ஞானக் கல்வியைப் பள்ளிகளில்போதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
புதிய கட்சியின் முதல் மாநாடு சென்னை மெரீனா கடற்கரையில் ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு பி.டி குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications