வந்தது புலிகளா? அகதிகளா?
ராமேஸ்வரம்:
இலங்கையில் இருந்து உயிர் தப்பி அகதிகளாக தமிழர்கள் தொடர்ந்து தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த வருடம்இதுவரை மட்டும் ஆயிரக்கணக்கான அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி கடற்கரைக்கு 8அகதிகள் வந்தனர். அவர்கள் முல்லைத்தீவில் இருந்து படகில் வந்ததாகவும் அதற்காக தலா இருபதாயிரம் ரூபாய்கொடுத்ததாவும் தெரிவித்தனர்.
சிங்கள ராணுவத்தினர் விமானத்தில் பறந்து வந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு மழை பொழிகிறார்கள். இதில்ஏராளமான வீடுகள் நொறுங்கிப் போயிவிட்டன. அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இனிமேல் அங்கு தமிழர்கள் வாழவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எனவே நாங்கள் உயிர் பிழைக்க இங்கு வந்தோம்என்று அவர்கள் கூறினர்.
இந்த எட்டு அகதிகளில், இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள விசுவமடுவைச்சேர்ந்த சத்யரூபன் என்பவரின் கைகளில்துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான தழும்புகள் உள்ளன. இடது கை செயலிழந்து உள்ளது.
அதே போல் கிளிநொச்சியைச்சேர்ந்த அர்ஜூன ராஜா என்பவரின் வலது கையில் குண்டு காயம் ஏற்பட்டதற்கான தழும்புஇருக்கிறது. அப்பாவித்தமிழர்கள், சிங்கள ராணுவத்தினருக்கு பலியாவது போல் இவர்களும் துப்பாக்கிசூட்டில்மாட்டிக்கொண்டார்களா? அல்லது இவர்கள் விடுதலைப்புலிகளா? என்று போலீஸார் சந்தேகத்தோடு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications