ஒரு வழக்கிலிருந்து அல்-உம்மா பாஷா விடுதலை
கோவை:
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அல் உம்மா இயக்கத்தின் தலைவர்பாட்ஷா விடுதலை செய்யப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா கோவைசிறையில் இருந்து வருகிறார். பாட்ஷா உட்பட 11 பேர் மீது கடந்த 96ம் ஆண்டு உக்கடம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு பேர் தண்டனை பெற்றனர். மூன்று பேர்தலைமறைவாக உள்ளனர். பாட்ஷா மீது தொடரப்பட்ட வழக்கு பிரிக்கப்பட்டு தனியாக விசாரணை நடந்தது.
கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பாட்ஷாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்நம்பிராஜன் உத்தரவிட்டார். பாட்ஷா மீது தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் இன்னும் தீர்ப்புவழங்கப்படவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து பாட்ஷா சிறையில் இருந்து வருகிறார்.