பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி இரு மடங்காக அதிகரிப்பு
இஸ்லாமாாத்:
பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி கடத்த இரு ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 30.2 மில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஆயுத உற்பத்தி ஆலையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் கையூம்கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை, கப்பல் படை ஆகியவற்றின் தேவையை நாங்கள்முழுமையாக பூர்த்தி செய்துவிட்டோம். இதனால், ஏற்றுமதியில் கவனம் செய்து வருகிறோம்.
வளைகுடா (அரேபியப் பகுதி), ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளுக்கு நாங்கள் ஆயுதங்களை ஏற்றுமதிசெய்கிறோம். ஏற்றுமதி கடந்த இரு ஆண்டுகளில் 107 சதவீதம் அதிகரித்துள்ளது. இது எங்கள் ஆயுதங்களின்விலை குறைவு என்பதால் மட்டும் சாத்தியமானதல்ல. தரமும் சர்வதேசத் தரத்திற்கு இருப்பது தான் காரணம்.
ஆயுத உற்பத்தியில் தனியார் துறையையும் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கையூம்.