For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஜுரத்தில் தி.மு.க.

By Staff
Google Oneindia Tamil News

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களே நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. சுறுசுறுப்படையத்தொடங்கிவிட்டது.

அரசு இயந்திரங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநில அமைச்சர்கள் சூறாவளிச் சுற்றுப் பயணத்தின் முதல் அடிஎடுத்து வைத்து விட்டனர். ஆளும் தி.மு.க. அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளதீவிரமாக இறங்கி விட்டது.

எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியைக் குறை கூறி, மக்களின் மனதை எளிதாக மாற்றி ஓட்டுக்களைப் பெற முடியும்.ஆளும் கட்சி என்னதான் செய்திருந்தாலும், மக்கள் மனதில் எளிதாக மாற்றம் வந்து விடாது. இந் நிலையில் ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதே "பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. இதன் விளைவு தான்அமைச்சர்களின் சூறாவளிச் சுற்றுப் பயணம்.

கடந்த சில நாட்களுக்கு முன், மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் அதிரடியாக இரண்டு நாள் சுற்றுப் பயணம்செய்தார். இரண்டு நாட்களில் 21 அரசு விழாக்களில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இவரது பேச்சு முழுவதும்அரசின் சாதனைகளைச் சொல்வதாகவே இருந்தது.

எத்தனை துறைகளில், என்ன சாதனை செய்திருக்கிறது என்பதை மறக்காமல் ஒப்பித்துச் சென்றார் சென்னைமேயரும் முதல்வர் கரிணாநிதியின் மகனுமான ஸ்டாலின். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் மு.கஸ்டாலின் பல முறை சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

ஸ்டாலின் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் என்.கே.கே. பெரியசாமி, துறைமுருகன், அந்தியூர்செல்வராஜ் என கடந்த சில நாட்களில் அமைச்சர்களின் வருகை தொடர்ந்து இருந்தது. ஸடாலின் வருகைக்கு முன்தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், சமூகநலத் துறை அமைச்சர் சற்குணபாண்டியன் ஆகியோரும்வருகை தந்தனர்.

சென்னையில் சமீபத்தில் நடந்த மாவட்ட செய்தித்துறை அதிகாரிகளின் கூட்டத்தில், செய்தித்துறையின் மீதுஅமைச்சர்கள் அடுக்கடுக்காக புகார்களை அடுக்கியுள்ளனர். இக் கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர்கள்எல்லோரும் ஆடிப் போய்விட்டனர்.

அரசின் சாதனைகளை பத்திரிக்கைகளில் போதுமான அளவிற்கு விளம்பரப்படுத்தவில்லை என்ற புகார்எதிரொலித்தது.

இன்னும் அமல்படுத்தப்படுத்தாத அனைத்துத் திட்டங்களையும் விரைவில் அமல்படுத்தவும், தீர்க்க முடியாத பலசிக்கல்களைத் தீர்க்கவும், அரசு இப்போது முனைப்புக் காட்டி வருகிறது.

இப்போது எந்தத் திட்டத்திற்கும் அரசிடம் "நிதி இல்லை என்ற பேச்சே இல்லை.

மக்களிடம் மனுப் பெறுவதிலும், அதனைத் தீர்ப்பதிலும் கூட அதிகாரிகள் முனைப்புக் காட்டத் தொடங்கிஉள்ளனர்.

தூசி படிந்து போன பலத் திட்டங்கள் தற்போது புதுப் பொழிவு பெறத் தொடங்கியுள்ளன. மக்கள் நலத் திட்டங்கள்விரைவாக அமல்படுத்தப்படுகின்றன. வரும் தேர்தலை மனதில் கொண்டு, ஏழை மக்களைக் கவர, கடந்த 1950ம்ஆண்டு தொடங்கப்பட்ட பூமி தானத் திட்டம், இப்போது அமல்படுத்தப்படுகிறது.

பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, அரசுக்குப்பயன்படாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கி விட்டது.

மாவட்ட நிர்வாகங்கள் புதிய சுறுசுறுப்பைப் பெற்றுள்ளன. இனி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள்அதிகமாகவே இருக்கும். சாதனை சத்தங்களும் அதிகம் கேட்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X