For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஷிங்டனில் காந்தி சிலை .. வாஜ்பாய் திறக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 16 ம் தேதி திறந்துவைக்கிறார்.

வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகம் அருகே மஸாசோசெட்ஸ் அவென்யூவில் இந்த 8 அடி உயரமுள்ள சிலைஅமைக்கப்பட்டுள்ளது.

1949 ம் ஆண்டு அமெரிக்காவில் வசித்து வந்த காந்தியவாதிகள் சிலர் காந்திக்கு சிலை அமைக்க வேண்டும் என்றுகோரிக்கை எழுப்பினர். ஆனால் அப்போது அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 51 ஆண்டுகள் கழித்துஇப்போதுதான் காந்தி சிலைக்கு வழிபிறந்துள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், காந்தி சிலை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கஅரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் மகாத்மா காந்தி நினைவுச் சிலைஅமைப்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி கொடுத்தது.

இதையடுத்து 1998 ல் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் பிராங்க் பிலோன், டேனியல் பாட்டிரிக் மொயினிஹான்ஆகியோர் இதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இனத்துறை அமைச்சர்வஜாஹத் ஹபிபுல்லா, தேசிய திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவாக்களித்தனர். பின்னர் மசோதாவை அங்கீகரிக்கும் ஆவணங்களில் அதிபர் பில்கிளின்டன் கையெழுத்திட்டார்.இதையடுத்து அமெரிக்காவில் காந்திசிலை அமைப்பது உறுதியானது.

தற்போது வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மாக காந்தி முழுஉருவச் சிலையை பிரதமர் வாஜ்பாய் திறந்துவைக்கிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X