பாக். அதிகாரிகளின் தூக்கத்தைக் கெடுத்த அபாய மணி அலறல்
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பாகிஸ்தான் உயர்அதிகாரிகள் தங்கியிருந்தஹோட்டலில் தவறுதலாக ஒலித்த அபாய மணியால் பரபரப்பு ஏற்பட்டது..
இதையடுத்து ஹோட்டல் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் உள்பட உயர் அதிகாரிகள்உஷார்படுத்தப்பட்டனர்.
நியூயார்க் நகரில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலில் பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கியிருந்த போது செப்டம்பர் 5 மற்றும் 6 ம் தேதி இரவு நேரங்களில் இந்தஅபாய மணி அலறியது.
இதையடுத்து அங்கிருந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். ஆனால் இயந்திரக் கோளாறு காரணமாகவே,அபாய மணி அலறியது என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்குச் சென்று நிம்மதியாகத்தூங்கினர்.
முன்னதாக, அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகள் பிற நாட்டு அதிகாரிகள் தனியாகத் தங்கியிருக்கும் அறைகளுக்குச்செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்காகத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் தங்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.