ராஜ்குமாரை மீட்க ரஜினியை அனுப்ப வேண்டும்
சென்னை:
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரை மீட்க நடிகர் ரஜினிகாந்தை அனுப்புங்கள் என்று கர்நாடக தலித் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
சென்னையில் கர்நாடக தலித் அமைப்புத் தலைவர் மூர்த்தி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் காலதாமதமானால் அது கர்நாடகத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும். ராஜ்குமார் கடத்தப்பட்டதில் இருந்து அங்குள்ளஉயர்ஜாதியினர் கோவில்களில் பூஜை செய்கிறார்களே தவிர, அவரை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராஜ்குமார் மிகவும் பிற்படுத்தப்பட்ட பனை தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் கடத்தல் பிரச்சனையால் பாதிக்கப்படப் போவது கர்நாடகத்தில்உள்ள குடிசை வாழ் மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அவர்கள் தமிழர்களாக இருந்தாலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்பாதிக்கப்படப்போவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
நடிகர் ராஜ்குமாரை மீட்க ரஜினிகாந்த் போன்ற பிரமுகர்களை அனுப்ப வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவரை மீட்க வேண்டும் என்றார் மூர்த்தி.












Click it and Unblock the Notifications