இந்தியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் .. அமெரிக்க தூதர்
கோவை:
இந்தியாவிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த வர்த்தகம் அதிகரித்துள்ளதுஎன இந்திய தூதர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
கோவையில் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ஆலோசனைக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்திய தூதர் விஸ்வநாதன் பேசியதாவது:
இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் மேம்பட்டு வருகிறது. கடந்த 1991-92 ம் ஆண்டில் இந்த நாட்டிற்கானஏற்றுமதியின் மதிப்பு 473.66 மில்லியன் டாலராக இருந்தது. இந்த ஏற்றுமதி கடந்த 1998-99ம் ஆண்டில் ஆயிரத்து 426. 58 கோடியாகஅதிகரித்துள்ளது.
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கை இந்த ஏற்றுமதிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகளில் லத்தீன்அமெரிக்காவிற்கான ஏற்றுமதி வாய்ப்பு மிகவும் அதிகம்.
தென் ஆப்பிரிக்கா வழியாக கப்பல் போக்குவரத்திற்கு வழி ஏற்பட்டுள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும்.
இப்பகுதியில் உள்ள மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, சிலோ, டிரினிடா, தபே போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இப்பகுதிகளுக்கு வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், விவசாய பம்புகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து, துணிகள் ஆகிய பொருட்களை ஏற்றுமதிசெய்யலாம் என்றார்.
இந்த ஆலோசனைக் கருத்தரங்கில், இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கேசவசந்திர ராவ் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications