தமிழரசனுக்கு வீரப்பனின் வீரவணக்கம்!
சென்னை:
தமிழ்த் தீவிரவாதிகளின் தலைவன் தமிழரசனின் நினைவு தினத்தை வீரப்பனும், அவனது கூட்டாளிகளும்,அவனுடன் சேர்த்திருக்கும் தமிழ் விடுதலைப்படையினரும் வீர வணக்கம் செலுத்தி அனுஷ்டித்தனர்.
தமிழ் விடுதலைப் படையின் தலைவனான தமிழரசன் சில ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிகொல்லப்பட்டான். அவனது நினைவு தினம் சத்தியமங்கலம் காட்டிற்குள் அவனது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தி அனுசரிக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தற்போது தமிழர் விடுதலைப் படையினர் சேர்ந்துள்ளனர். வீரப்பனும்தற்போது தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்டிருக்கிறான்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன், அவரை விடுவிக்க விடுத்துள்ளகோரிக்கைகளில் தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதியன்று காட்டுக்குள் அமைக்கப்பட்ட கொடிமரம் ஒன்றில் தமிழ்விடுதலை இயக்கக் கொடியை ஏற்றி அதன் கீழ் கார்ல் மார்க்ஸ், ஏங்கெலஸ், லெனின், செ.குரோவாபோன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களுடன் தமிழரசன், வீரப்பனின் தம்பி அர்ஜூனன் மற்றும்தர்மபுரி ரவீந்திரன் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அப்படங்களுக்கு வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் ராணுவ உடை அணிந்து வீர வணக்கம்செலுத்தினர். தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மாறனும் வீர வணக்கம் செலுத்தினான்.
காட்டுக்குச் சென்று வந்த நக்கீரன் கோபால், இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராணுவஉடையில் வீர வணக்கம் செலுத்தும் வீரப்பனின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications