17-ல் மதுரை பல்கலைக்கழக எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைத் தூர கல்வி இயக்ககம் சார்பில் எம்.பி.ஏ. (டி.எல்.பி) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வருகிற 17ம்தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாலை நேரக் கல்லூரி, மதுரை பல்கலை கல்லூரி.
சென்னை: சென்னை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி பெரியார் கம்ப்யூட்டர் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், ஐ.டி.பி.எல்.,நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
இதுதவிர, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்வியியல் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை உப்பிலிபாளையம்பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி புதூர் நாலு சாலை பெரியார் சிறப்பு கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம், ஒசூர் பரிமளம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிஆகிய மையங்களில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தொலை தூர கல்வி இயக்குனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.