எம்.எல்.ஏ. கார் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ.,கார் எரிக்கப்பட்ட வழக்கு விசாரணைசெப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் போலீஸ்காரர் செல்வராஜ் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது இரண்டாவது கூடுதல் தன்மை நீதிமன்றத்தில்நிடந்து வருகிறது.
இவ்வழக்கு விசாரணையில் செப்டம்பர் 11ம் தேதி குற்றவாளிகள் ஆஜர்செய்யப்பட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்குஒத்தி வைத்து நீதிபதி பூபாலன் தீர்ப்பளித்தார்.
செல்வராஜ் கொலை செய்யப்பட்ட அடுத்த நாள், கோவை அரசு மருத்துவமனையில்கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 4 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ தண்டபாணியின் கார் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது. இந்த வழக்கு கோவை மூன்றாவது நீதிமன்றத்தில் விசாரணைதுவங்க உள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் உட்பட 10 பேர்திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது, அவர்கள் மீதுகுற்றப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications