For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஸ் உலகக் கோப்பை: இறுதிச் சுற்றில் ஆனந்த்

By Staff
Google Oneindia Tamil News

ஷென்யாங் (சீனா):

செஸ் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாட இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தகுதி பெற்றுள்ளார்.

சீனாவில் உள்ள ஷென்யாங் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அவர் ஜெல்பான்டைத் தோற்கடித்தார்.

அரையிறுதியின் முதல் மூன்று ஆட்டங்களில் இருவரும் டிரா கண்டனர். இதையடுத்து டை-பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரிலும் முதலில்நடந்த 3 ஆட்டங்களில் இருவரும் டிரா கண்டனர்.

இதையடுத்து 4-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் இருவருக்கும் கடுமையாக இருந்தது. ஆனால், 41-வது நகர்த்தலில் ஜெல்பான்ட்தோல்வியடைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றார்.

மிலோஸ்-பரீவ் இடையே மற்றொரு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டை-பிரேக்கரில் பரீவ் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X