கோவை கைதிகள் உண்ணாவிரதம் தொடர்கிறது
கோவை:
கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் புதன்கிழமையும் தொடர்ந்தது.
கோவை சிறையில் செப்டம்பர் 12ம் தேதி இரவு முதல் கைதிகள் திடீரென உண்ணாவிரதம் தொடங்கினர். இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்சம்பத் தலைமையில் இந்த உண்ணாவிரதம் புதன்கிழமையும் தொடர்ந்தது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாட்ஷா, மதானி உட்பட 167 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ கார் எரிப்பு வழக்குத்தொடர்பாகவும் அர்ஜூன் சம்பத் உட்பட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பலரும் சிறையில் உள்ளனர்.
பாட்ஷா உட்பட பலருக்கு மாமிச உணவு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்ற உணவை தங்களுக்கு வழங்காவிட்டாலும், குறைந்த பட்சம் எங்களுக்குநல்ல உணவு வழங்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் உட்பட கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் விவாதித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மறுத்ததோடு அதிரடி ஆனந்தனைத் தாக்கியுள்ளனர். இதனை எதிர்த்துஅவர்களும் பதிலுக்கு போலீஸ் கண்காணிப்பாளரைத் தாக்கியுள்ளனர்.
தற்போது, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனைவரும், போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட கலெக்டருடன் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனதிட்டவட்டமாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications