For Daily Alerts
Just In
சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது கர்நாடகம்
டெல்லி:
வீரப்பன் கோரிக்கைப்படி தடா கைதிகளை விடுவிப்பது சரிதான் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதன்கிழமை பதில் மனுத்தாக்கல் செய்தது.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகள் உள்பட 121 பேரை விடுவிக்க வேண்டும்என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தான். இதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்திருந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கைதிகளை விடுவிப்பதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. கைதிகளை விடுவிப்பது குறித்து கர்நாடக அரசு எடுத்தமுடிவு குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Comments
Story first published: Wednesday, September 13, 2000, 5:30 [IST]