பிக் பாக்கெட் திருடர்களுக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிக்பாக்கெட் திருடர்கள் மூன்று பேருக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர்கள் ராதா என்ற ஷாஜகான், பாபு என்ற வேலுச்சாமி, சரவணன்.
இவர்கள் வரும் கூட்டாக பிக்பாக்கெட் "தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் வழக்கமாக மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ்களில் ஏறி, சாய்பாபாகாலனி வரை தங்கள் கைவரிசையை காண்பித்து வந்தனர்.
எதிர்க்கும் பயணிகளை பிளேடுகளைக் காட்டி மிரட்டி வந்தனர். இவர்களைப் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மூன்றாவது உதவி அமர்வு நீதிபதி விஸ்வநாதன், மூவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications