இன்று பதில் மனு தாக்கல் செய்கிறது கர்நாடகம்?
பெங்களூர்:
தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக கர்நாடக அதிகாரிகள் இருவர் டெல்லி விரைந்தனர்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்நிபந்தனை விடுத்திருந்தான்.
இதன்படி, அவர்களை விடுவிப்பது என்று கர்நாடக அரசு தீர்மானித்தது. ஆனால் 1992 ம் ஆண்டு வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடகஎஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் கைதிகளை விடுவிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதுதொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்என்றும் அது கேட்டுக் கொண்டது.
அதன்படி புதன்கிழமை கடைசி நாள் என்பதால், கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக சிறப்பு அதிரடிப்படை தலைவர்ஹர்ஷவர்த்தன்ராஜூ மற்றும் மைசூரைச் சேர்ந்த அரசுத் தரப்பு வக்கீல் அஸ்வின் குமார் ஜோஷி ஆகியோர் திங்கள்கிழமை இரவு டெல்லி சென்றனர்.
இவர்கள் இருவரும் டெல்லி செல்லுமுன் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனைநடத்தினர்.












Click it and Unblock the Notifications