இந்தியாவுடன் இணைவது முட்டாள்தனமானது .. வங்கதேச பிரதமர்
டாக்கா:
இந்தியாவுடன் வங்கதேசம் இணைவது என்பது முட்டாள்தனமான செயல் என்று அந் நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜெட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டாக்கா திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவுடன் வங்கதேசம் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு இணைவது என்பது தவறான, முட்டாள்தனமான காரியம். அதுஒருபோதும் நடக்காது.
வங்கதேசம் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை மட்டுமே விரும்புகிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் பொதுவான கரன்சி முறையை கொண்டுவருவது பற்றி யோசிக்க இது சரியான தருணமல்ல.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் கரன்சிகளுக்கு ரூபாய் என்று பொதுவான பெயர் உள்ளது. ஆனால், வங்கதேச கரன்சிக்குடாகா என்ற பெயர் உள்ளது.
ஆகவே, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பொதுவான கரன்சியைக் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றார் ஹசீனா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications