மக்களை "அழ வைத்த வெங்காய விவசாயிகள் போராட்டம்
திருநெல்வேலி:
வெங்காயத்துக்கு நியாய விலை நிர்ணயிக்கக் கோரி சாலையில் வெங்காயத்தைக் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். தென்காசி அருகேயுள்ளபாவூர்சத்திரத்தில் புதன்கிழமை மாலை இச் சம்பவம் நடந்தது.
பாவூர்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெங்காயம், மிளகாய், தக்காளி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், அவற்றுக்குநியாயமான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.
ஆகவே, பெல்லாரி வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 என்றும், மிகாய் வற்றலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் என்றும் விலைநிர்ணயம் செய்யவேண்டும் என்று அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயத்தைச் சாலையில் கொட்டி நூதன முறையில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்துபாவூர்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அவர்கள் வெங்காயத்தைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இப் போராட்டத்துக்கு இ. கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழப்பாவூர் கிளை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
சாலையில் கொட்டப்பட்ட வெங்காயத்தின் மீது வாகனங்கள் சக்கரங்கள் ஏறி நசுக்கின. இதனால், வெங்காயத்தின் நெடி காற்றில் பரவியதால் அப் பகுதிமக்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.












Click it and Unblock the Notifications