ஹாக்கி: பதக்கக் கனவின் முதல் படியில் இந்தியா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற நோக்கில் கனவில் உள்ள இந்தியஅணி தனது கனவை நனவாக்கும் முயற்சியின் முதல்கட்டமாக அர்ஜென்டினாவைஎதிர்த்து ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானஆட்டமாகும். கடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கிலும் முதல் ஆட்டத்தில்அர்ஜென்டினாவை எதிர்த்து இந்தியா விளையாடியது.
ஆனால், அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி அந்த ஒலிம்பிக்முழுவதும் தொடர்ந்தது. அதனால், எப்போதும் இல்லாத அளவில் பட்டியலில் மிகமோசமாக 8-வது இடத்தை இந்தியா பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய மோசமான நிலை சிட்னியில் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலையில் நன்குபயிற்சி பெற்று புதிய ஆட்ட நுணுக்கங்களுடன் இந்திய அணி புதிய தெம்புடன்சிட்னியில் விளையாடுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை இந்தியாவெல்லும்பட்சத்தில் அந்த வெற்றி இந்திய அணியினருக்குப் புதிய உற்சாகத்தையும்உத்வேகத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1980-ம் ஆண்டுக்கு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா கடைசியாக தங்கம் வென்றது.அதற்குப் பிறகு ஹாக்கியில் இந்தியாவுக்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை.மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த பாஸ்கரன்தான் இந்தமுறை இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை மற்ரும் முகேஷ் குமார்இவரும் இப்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். நிறைய போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவசாலிகள். 3-வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் இவர்களதுகையில்தான் இந்திய அணியின் வெற்றி உள்ளது.
இவர்களுக்கு உதவியாக முகம்மது ரியாஸ் மற்றும் கேப்டன் ரமன்தீப் சிங் ஆகியோரும்விளையாடி வெற்றி தேடித் தருவார்கள் என்று பயிற்சியாளர் பாஸ்கரன் நம்புகிறார்.
அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஸ்பெயின், தென் கொரியா,போலந்து ஆகிய நாடுகளை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. முதல் ஆட்டத்தில்கிடைக்கும் வெற்றி அடுத்த தொடர் வெற்றிக்கு வித்திடலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications