ஜெயாவையே குழப்பும் கோவை அ.தி.மு.க.
கோவை அ.தி.மு.க.,குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவே குழம்பிப்போகும் அளவிற்கு உட்கட்சிப் புகார்கள் தலை தூக்கியுள்ளது.
இதன் விளைவாக கடந்த ஓராண்டிற்குள் நான்கு மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டுவிட்டனர். இன்னும் திருப்தியில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று புதியமாவட்டச் செயலர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இவர்கள் பதவி எத்தனை நாள் என்பது தான் தொண்டர்களிடையே தற்போது நிலவும்விவாதம்.
கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில்அ.தி.மு.க.,விற்குத் தோல்வியே கிடைத்தது. இந்த தோல்வியையடுத்து ஜெயலலிதாஅவசரமாக அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசஆர்வம் காட்டினார்.
எனவே, கட்சியின் அடிப்படை நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து குறைகளைக்காது கொடுத்துக் கேட்டார். அப்போது அவர்கள் கூறிய அடுக்கடுக்கான புகார்களால்அதிர்ந்து போனார்.
இவ்வளவு விஷயமாக எனத் திகைத்துப் போன ஜெயலலிதா, அதிரடியாக மாவட்டச்செயலர்களை மாற்றினார். மாவட்டச் செயலர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிய மாவட்டச் செயலர்களுக்கு டாடா சுமோ கார் முதல் அனைத்து வசதிகளும்செய்து கொடுக்கப்பட்டன. இந்த வகையில் கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க,செயலர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. தேர்தல் சமயத்தில் அ.தி.மு.கவின் மாநகர்மாவட்டச் செயலராக மலரவன் இருந்து வந்தார்.
தேர்தல் முடிந்த பிறகு நடந்த தொண்டர்கள் சந்திப்பின் போது மலரவன் மீதுகடுமையான புகார் தெரிவிக்கப்பட்டன. வெண்தாமரை பாலு என்பவர் மலரவன் மீதுசரமாரியாகப் புகார்களை வீசினார். விளைவு, மலரவன் மாநகர் மாவட்டச் செயலர்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.
புறநகர் மாவட்டச் செயலராக இருந்த அப்பாதுரையும் நீக்கப்பட்டார்.
பின்னர், மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, முறையே மாநகர் மாவட்டச் செயலராகவெண்தாமரை பாலுவும், வடக்கு மாவட்டச் செயலராக ரோகிணியும், தெற்குமாவட்டச் செயலராக செல்வராஜூம் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மூவருக்கும் டாடா சுமோ கார் வழங்கப்பட்டது. இதில் வெண்தாமரை பாலு,கொஞ்சம் "பசை உள்ளவர் என்பதால் அவருக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது.
மலரவன் மீது அடுக்கடுக்காக புகார் கூறியதால் இவருக்கு மாவட்டச் செயலர் பதவிகிடைத்தது. அதோடு தினகரனுக்கு ஆதரவாளர் என்ற முறையிலும் இப்பதவிகிடைத்தது என தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
ரோகிணி மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு டாடா சுமோ கார் வழங்கப்பட்டாலும்,இருவரிடமும் போதுமான நிதி ஆதாரம் இல்லை. எனவே, இவர்களுக்கு மாதா மாதம்,கணிசமான தொகையையும் தலைமை வழங்கியது.
இருந்தபோதிலும், இவர்களின் பதவி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வெண்தாமரைபாலு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் துவங்கி விட்டதாகப்புகார்கள் மேலிடத்திற்கு சரமாரியாகச் சென்றன.
மற்ற இருவருக்கும் நிர்வாகத் திறமை இல்லை என தலைமை தீர்மானித்தது. இதன்விளைவாக வெண்தாமரை பாலுவின் பதவி 45 நாட்களில் முடிவுக்கு வந்து விட்டது.
ஒரு வாரம் காலியாகவே இருந்த மாநகர் மாவட்டச் செயலர் பதவிக்கு மலரவனின்ஆதரவு பெற்ற ரசாக் பொறுப்பேற்றார். இவர் மீதும் பதிலுக்கு மலரவன்எதிர்கோஷ்டியினர் வேட்டு வைத்தனர்.
தொண்டர்களை மதிப்பதில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் என தலைமைக்குபுகார் செல்லவே, இவரும் மாற்றப்பட்டார். புறநகர் வடக்கு மாவட்டச் செயலராகப்பதவியிலிருந்த ரோகிணியும் மாற்றப்பட்டார். இவர்களிடமிருந்து டாடா சுமோ கார்பறிக்கப்பட்டது.
தற்போது, மாநகர் மாவட்டச் செயலராக செ. ம. வேலுச்சாமியையும், இணைச்செயலராக ரசாக்கையும், தெற்கு மாவட்டச் செயலராக ஜி. சண்முகவேலுவையும்,இணைச் செயலராக ரோகிணியையும் நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டது.
இவர்கள் வெள்ளிக்கிழயைன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்புக்குமுன்பு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டத் தலைமையகமான இதயதெய்வம் மாளிகை இன்று பரபரப்பாக இருந்தது. இவர்களாவது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனையில் இறங்கியுள்ளனர்.
அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் யோசனையால், பெரும் குழப்பத்தில்அ.தி.மு.க., ஆழ்ந்தள்ளது. தேர்தலுக்குள் கோவை மாவட்டத்திற்கு சிறப்பானநிர்வாகம் தேவை என கட்சித் தலைமை எதிர்பார்க்கிறது.