தமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி
திருச்சி:
தமிழகத் தபால்துறை ரூ. 6 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்று தமிழ்நாடுதலைமைத் தபால் அதிகாரி ஏ.வி.பி. மேனன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கிராமங்களில் கிளை தபால் நிலையங்கள் உள்ளன.நடப்பு ஆண்டில் மேலும் 15 கிளை தபால் நிலையங்கள் திறப்பட உள்ளன.
இந்தியா முழுவதும் சுமார் ரூ. 80 கோடி செலவில் தபால் துறைநவீனப்படுத்தப்படவுள்ளது. இதில் தமிழகத் தபால் துறை மட்டும் ரூ. 6 கோடியில்நவீனப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள சில தலைமைத் தபால் நிலையங்களில் கம்ப்யூட்டர் வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 7 தலைமைத் தபால் நிலையங்களில்கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும்.
மணியார்டர்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் மூலம் 24 மணி நேரத்துக்குள்மணியார்டர்களைப் பட்டுவாடா செய்ய முயற்சி மேர்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியத் தபால் துறைக்கு ரூ. 1800 கோடி வருமானம் கிடைத்துள்ளது.இதில் தமிழகத் தபால்துறைக்கு மட்டும் ரூ. 225 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் கூடுதல் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்து இந்தியத் தபால் துறைசெயல்பட்டு வருகிறது. தனியார் கூரியர் நிறுவனங்களின் போட்டியைச்சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மேனன்.












Click it and Unblock the Notifications