பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இந்தியா தயார், ஆனால்...
வாஷிங்டன்:
பாகிஸ்தானுடன் பேச்சுவாத்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என அமெரிக்கஅதிபர் பில் கிளிண்டனிடம் வாஜ்பாய் தெரிவித்தார்.
தெற்கு ஆசியாவில் நிலவி வரும் பயங்கரவாதம் குறித்து கிளின்டண் கவலைதெரிவித்தார். அவர் தெற்கு ஆசியாவை உலகிலேயே மிக ஆபத்தான இடம் எனவர்ணித்தார்.
அமெரிக்க அதிபர் கிளிண்டனை வெள்ளிக்கிழமையன்று வாஜ்பாய் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை வெள்ளை மாளிகையில்அரைமணி நேரம் நடந்தது. இருவரும் அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் இருவரும்தனிமையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் இடம் பெற்ற பேச்சுவார்த்தை 40 நிமிட நேரம் நடைபெற்றது.
காஷ்மீர் விஷயத்தில், கிளிண்டனிடம் இந்தியாவின் நிலை பற்றி வாஜ்பாய்எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் இரு நாடுகளுக்கும்இடையேயான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர தயாராகஇந்தியா தயாராகஉள்ளது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும், கார்கில்போரினாலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட ராணுவ புரட்சியாலும் பேச்சுவார்த்தைக்கானசூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது..
இந்தியாதான் பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ்நிலையை உருவாக்கியது. லாகூர்பஸ் பயணம் மூலமாக நட்புறவுள்ள சூழ்நிலையை இந்தியா உருவாக்கியது. என்றுமேஇந்தியா பேச்சுவார்த்தைக்கும், சுமுகமான முடிவுக்கும் தடையாக இருந்ததில்லை.ஆனால் இது இந்தியாவால் மட்டுமே சாதிக்கக் கூடிய விஷயமில்லை.
எல்லை தாண்டிய தீவிரவாத்ததையும், காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டிவரும்வதையும் பாகிஸ்தான் அதை நிறுத்தாத வரை பேச்சு வார்த்தையை துவக்குவதுஎன்பது இயலாத காரியம் என்றார் வாஜ்பாய்.
கிளிண்டனும் வாஜ்பாயின் கருத்தை ஒப்புக் கொண்டார். அமெரிக்க அதிகாரிகளும்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேச்சு வார்த்தைக்கு தேவையான சூழ்நிலையைஉருவாக்குவது பாகிஸ்தானிடம்தான் உள்ளது. வாஜ்பாய் மேற்கொண்ட லாகூர் பஸ்பயணமும் வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications