பஹ்ரைனில் அனுமதியின்றி வாழும் இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

போலி பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் சென்று அங்கு வாழும் இந்தியர்கள் பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளபடி பொதுமன்னிப்பு கேட்கமிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து இந்தியாவிற்கான பஹ்ரைன் தூதர் எஸ்.எஸ்.கில் கூறியதாவது:

பஹ்ரைனில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் அதிகம். இவர்களில் 40, 000பேர் போலி பாஸ்போர்ட் அல்லது போலி விசா மூலம் இங்கு வாழ்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இவர்களக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களுக்கு பஹ்ரைனில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கவோ அல்லது சிறப்பு பயண தஸ்தாவேஜூகள்அளித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பவோ செய்யலாம் என்று பஹ்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டப்படி அக்டோபர் 1 ம் தேதி முதல் அனுமதியில்லாமல் இங்கு வாழ்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். அவர்கள்அக்டோபர் 1 முதல் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் பொதுமன்னிப்பு பெறலாம்.

1995 ம் ஆண்டு 1,268 இந்தியர்களும், 1997 ல் 3,500 பேரும், பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பினார்கள்.1997 ல் 4,950 பேரும், 1998 ல் 1,218 பேரும் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் குடியுரிமையை நிரந்தரப்படுத்திக் கொண்டார்கள்.

இதே போல் இந்த வருடமும் பொது மன்னிப்பு வழங்க பஹ்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது. இதில் இந்த வருடம் 3,500 முதல் 4000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பவோ அல்லது அங்கேயே குடியுரிமை பெறவோமுயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமன்னிப்பு கேட்பதற்காக இதுவரை 1000 மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளனர் என்றார்கில்.

பஹ்ரைன் உயர் அதிகாரிகள், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி விட்டுபொதுமன்னிப்பு குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+