For Daily Alerts
Just In
வியட்நாமில் கடும் மழைக்கு 25 பேர் பலி
ஹனோய்:
வியட்நாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குழந்தைகள்.
இது குறித்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முதன்மை அதிகாரி ஜான் கூறியதாவது:
வியட்நாமில் பெய்து வரும் கடும் மழையினால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.செஞ்சிலுவைச் சங்கம் முழுவீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அணைகளில் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளது. தெருக்களில் ஆறு போல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 55, 000 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையினால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கடும் மழைக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்என்றார் ஜான்.
Story first published: Monday, September 18, 2000, 5:30 [IST]