மூப்பனாருடன் இனி உறவு இல்லை --- கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசுடன் எந்த விதமான உறவும் இல்லை என கருணாநிதிஅறிவித்துள்ளார்.
த.மா.கா.,- தி.மு.க. கூட்டணி 1996-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு முறிந்தது.தற்போது தி.மு.க. ஆட்சியை எதிர்த்து 27-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக மூப்பனார் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த முப்பெரும் விழாவில்கருணாநிதி பேசியதாவது:
தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி. கோயபல்ஸ் பிரசாரம்நடைபெறுகிறது என மூப்பனார் கூறியுள்ளார். மூப்பனார் பொய்யான குற்றங்களைதி.மு.க. மீது சுமத்த ஆரம்பித்துள்ளார். நானும் இதுவரை மூப்பனாரின் பேச்சுக்கள் பற்றிகவலைப்பட வேண்டாம் என இருந்தேன்.
அமைச்சர்கள் கோ.சி. மணி, துரைமுருகன் இருவரும் எங்களை பேச விடுங்கள் என்றுகேட்டுக் கொண்டனர். வெற்றிகொண்டானின் பேச்சில் இருந்த கடுமைக்காக நான்வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு க்ோருகிறேன். நான் வேறு யாரிடமும் மன்னிப்புகேட்க மாட்டேன்.
பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. பிறந்தநாள் என இந்தமுப்பெரும் விழாவில் இனி த.மா.கா.வுடன் எந்த விதமான உறவும் கிடையாது எனஅறிவிக்கிறேன். த.மா.கா.வுடன் உறவு இல்லையே தவிர, அங்கிருந்து இங்கேவருபவர்களுக்கு இடம் உண்டு.
பேராசிரியர் கூறியதைப் போல் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அய்யாஅவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போம். அண்ணாவின் எண்ணங்களைநிறைவேற்று வருகிறோம் என்றார் கருணாநிதி.