நீச்சல்: தோற்றார் நிஷா மில்லட் - முடிந்தது இந்தியாவின் சவால்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில்இந்தியாவின் நிஷா மில்லட் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
அவர் பந்தைய தூரத்தைக் கடக்க 2 நிமிடம் 27 விநாடிகள் எடுத்துக் கொண்டார். இதுஅவரது சொந்த சாதனையான 2 நிமிடம் 06.62 விநாடிகளை விட வெகு அதிகம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் 39 பேர். இதில் இந்தியாவின் நிஷாமில்லட் 37-வது இடத்தைப் பிடித்தார்.
நிஷா மில்லட் தோற்றதை அடுத்து நீச்சலில் இந்தியாவின் சவால் முடிவுபெற்றது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில்இந்தியாவின் சப்பீர் ஹபிபுல்லா ஹக்கீமுதீன் தகுதிச் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் நிஷா மில்லட், ஹக்கீமுதீன்இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரும் தகுதிச் சுற்றிலேயே தோற்றுவெளியேறிவிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications