ஆ...! தமிழ்நாட்டில் இன்னொறு கட்சி
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து ""புரட்சித் தலைவர் அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
இக்கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ராஜாராம், பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக மந்திரிகள் எஸ்.டி.எஸ்., ராஜாராம், பண்ருட்டி உள்ளிட்டவர்கள் ஒன்று சேர்ந்து புதிய கட்சியைதொடங்குவது என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தனர்.
அதன்படி சென்னையில் திங்கள்கிழமை இந்த மாஜித் தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூடி ஆலோசனைநடத்தினர். அந்த ஆலோசனைக்கு பின்னர் "புரட்சித் தலைவர் அதிமுக உதயமானது. கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இணைப் பொதுச்செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலாளராக திருச்சி சவுந்தரராஜன், துணைத்தலைவராக நாமக்கல் அருணாசலம், பொருளாளராக ராஜா முகமது ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய தங்களது புதிய கட்சி பாடுபடும் என்று இந்த தலைவர்கள் கூட்டாகதெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications