For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தலைமையை மூ.மு.க. ஏற்காது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஜெயலலிதா தலைமையை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஏற்காது என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.

பசும்பொன் மாவட்டம் கண்டதேவியில் தேவர் ரதத்தை தொடங்கி வைத்து, டாக்டர் சேதுராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது, ஜெயலலிதா தலைமையை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஏற்காது. அண்மைக் காலங்களில் அரசியல்வாதிகளால்ஜாதிச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.

எங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை பார்த்து மனம் வெதும்பி, ஜாதி சண்டைகளுக்குமுற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த ரதத்தை தொடங்கியுள்ளோம். இந்த நாடு, நல்லவர்கள் எதுவும் செய்யமுடியாமல்இயலாதவர்களாக இருப்பதால் தான் மோசமான சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

நான் மட்டும் தனித்து நின்று ஏதும் செய்யமுடியாது. மக்கள் நம்பிக்கையை பெற பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையைவளர்த்தாக வேண்டும். ஜாதி, அமெரிக்கா- ஜப்பான் போன்ற நாடுகளில் கிடையாது. கிராமங்களில் பொருளாதாரரீதியாகஅனைவரும் முன்னேற்றம் அடைந்தால் தான் ஜாதி ஒழியும். கலப்பு திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிய முடியாது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேவைப்பட்டால் திருமாவளவன், ஜான்பாண்டியன் ஆகியோரோடு தேர்தல் கூட்டணி வைக்கவாய்ப்புக்கள் இருக்கிறது. ஜெயலலிதா சொல்வதுபோல் தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சியமைக்கமுடியாது. கூட்டணி ஆட்சிதான்.

ஜெயலலிதாவை முக்குலத்தோர் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா பசும்பொன் தேவர் திருமகனை தனதுவழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் நானே அவருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன் என்று பத்திரிக்கையாளர்களிடம்சொன்னார் டாக்டர் சேதுராமன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X