இலங்கை: வேன் குண்டுவெடிப்பில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். 7 ராணுவவீரர்கள் படுகாயமடைந்தனர்.

தலைநகர் கொழும்பிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்முனைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்தது.

கல்முனை-அம்ப்மாரா ரோட்டில் நின்று கொண்டிருந்த வேனில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 4 பேரையும் அவர்கள் கைதுசெய்தனர். பின்னர் வேனை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந் நிலையில், அங்கு வந்த மேலும் சில போலீஸாரும் வேனைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேனில் வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டுகள் வெடித்ததில் இரு போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+