இலங்கை: வேன் குண்டுவெடிப்பில் 3 பேர் பலி
கொழும்பு:
வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். 7 ராணுவவீரர்கள் படுகாயமடைந்தனர்.
தலைநகர் கொழும்பிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்முனைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்தது.
கல்முனை-அம்ப்மாரா ரோட்டில் நின்று கொண்டிருந்த வேனில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 4 பேரையும் அவர்கள் கைதுசெய்தனர். பின்னர் வேனை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், அங்கு வந்த மேலும் சில போலீஸாரும் வேனைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேனில் வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டுகள் வெடித்ததில் இரு போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications