டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு ஒரு வெற்றி - இரு தோல்விகள்
சிட்னி:
டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை ஒரு வெற்றியும், இரு தோல்விகளும் கிடைத்தன.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சேதன் பபூர் தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றார். ஆனால், ராமனுடன் சேர்ந்து ஆடி இரட்டையர் ஆட்டத்தில் தோற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவுலோமி கடக் இரண்டாவது சுற்றிலும் தோற்றுவெளியேறினார்.
திங்கள்கிழமை நடந்த ஆண்களுக்கான சி பிரிவு ஆட்டத்தில் நியுசிலாந்து வீரர் பீட்டர் ஜாக்சனை25-23, 21-18, 23-21 என்ற கணக்கில் சேதன் பபூர் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குமுன்னேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. குரூப் பி பிரிவின் இரண்டாவது சுற்றுஆட்டத்தில் சேதன் பபூர்-ராமன் ஜோடி தோற்றது. இத்தோல்வியை அடுத்து இரட்டையர் பிரிவில் இருதோல்விகளுடன் இந்திய அணி வெளியேறியது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவுலோமி கடக் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துபோட்டியிலிருந்து வெளியேறினார். திங்கள்கிழமை நடந்த இரண்டாவது சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டின்ஆன்னி போய்லியுவிடம் 21-12, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
யு.என்.ஐ.