திறமையற்ற பணியாளர்கள் வருவதைத் தடுக்க புதிய சட்டம்: யு.ஏ.இ. முடிவு

Subscribe to Oneindia Tamil

துபாய்:

இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து திறமையற்ற பணியாளர்கள் வருவதைத்தடுக்க புதிய சட்டம் இயற்ற ஐக்கிய அரபுக் குடியரசு (ஐ.அ.கு.) முடிவு செய்துள்ளது.

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ஏராளமானவெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர். அந் நாட்டு திட்டக் கமிஷனின் ஆய்வுப்படிஅங்கு 14 லட்சம் வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர்.

அதாவது அந் நாட்டுப் பணியாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் என்பதும் இதில் 87.1 சதவீதத்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 53.7 சதவீதத்தினர் இந்தியாவைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஐக்கிய அரபுக்குடியரசைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும்,மொத்த மக்கள் தொகையில் சமச்சீரற்றதன்மையும் நிலவுகிறது.

ஆகவே, வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபுக் குடியரசில் பணியாற்ற வரும்பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அதற்காக தனி சட்டம் இயற்றவும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந் நாட்டின தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறைஅமைச்சர் காலித் அல் கஸ்ராஜி தெரிவித்தார்.

புதிய சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். புதிய சட்டத்தைவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதே நேரத்தில் திறமையற்றபணியாளர்கள் வருவதை முழுமையாக தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றார் கஸ்ராஜி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+