டான்சி வழக்கு: ஜெ.வுக்காக டெல்லி வக்கீல் ஆஜர்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக டெல்லி வக்கீல் வினோத் அர்விந்த் மூன்றாவது தனிநீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாதாடுகிறார்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் ஜோதி கடந்த 4 ம் தேதி முதல் வாதாடி முடித்தார்.
இந்நிலையில் டான்சி வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 6 வது எதிரியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் இணைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் தரப்பில் ஆஜரான வக்கீல் அசோகன் வாதாடினார்.
அவர் தனது வாதத்தில், இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், கற்பூர சுந்தர பாண்டியன் குற்றவாளியாகச்சேர்க்கப்படவில்லை. பின்னர்தான் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
இவ்வழக்கில் கற்பூர சுந்தரபாண்டியனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் எந்தச் சாட்சியமும் இல்லை என்றார்.
இதற்கிடையில் ஜெயலலிதா சார்பில் டில்லி வக்கீல் வினோத் அர்விந்த் பாப்டே செவ்வாய்க்கிழமை மூன்றாவது தனிநீதிமன்றத்தில் ஆஜராகிவாதாட இருக்கிறார்.