அழகிரியுடன் தொடர்பு வேண்டாம் - திமுக
சென்னை:
மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டாம்என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான க. அன்பழகன்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளிலும், கட்சித் தொண்டர்களிடையேஉள்ள கட்டுக்கோப்பை குலைக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.
ஆகவே, அவருடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த அறிவிப்பையும் மீறி அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் திமுகவினர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பழகன் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. அழகிரி திமுகவில் முக்கியப் பிரமுகராகஇருந்தார். கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அடுத்து சில நாட்களுக்குமுன்பு அவர் திமுகவில் இருந்து விலகினார்.
திமுகவில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே விலகுவதாக அவர்அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.