கலிபோர்னியாவில் இந்திய டாக்சி டிரைவர் படுகொலை
சான் ஜோஸ்:
கலிபோர்னியாவிலுள்ள, சான் ஜோஸ் கல்லூரி வாசலில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடந்தார்.
சான்ஜோஸ் கல்லூரி அமைந்துள்ள மாயேலின் அவென்யூ பகுதியில் கிடந்த அவரது பிணத்தைப் பார்த்த நபர் ஒருவர் இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அப்பகுதிக்குச் சென்று டாக்சி டிரைவரின் பிணத்தை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸ்-பொதுமக்கள் தொடர்பு அதிகாரி தலய்சன் கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்ட டிரைவரின் பெயர் தல்ஜித் சிங். வயது 29.திருமணமாகாதவர்.
அவரை யார்? எதற்காக? துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்? இந்தக் கொலையின் பின்னணி என்ன? அவரது உடம்பில் எத்தனை குண்டுகள்பாய்ந்துள்ளன? அவர் வைத்திருந்த பணமோ, அணிந்திருந்த நகைகளோ கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவில்லை.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் பிற விவரங்கள் தெரிய வரும் என்றார்.
தல்ஜித் சிங், மில்பிடாஸ் மேக்ஸி கேப் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தல்ஜித் சிங் கொலை செய்யப்பட்டது குறித்து அவர் வேலை செய்து வந்தமேக்ஸி கேப் நிறுவன உரிமையாளர் பல்ஹர் சிங் கூறுகையில், தல்ஜித் மிகவும் நல்ல மனிதர். தோழமை உணர்வுடன் எப்போதும் சிரித்த முகத்துடன்காணப்படுவார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் 16 பேரில் இவரும் ஒருவர். அவர்ஒரு வார விடுமுறைக்குப்பின் செவ்வாய்க்கிழமை தான் வேலைக்குச் சேர்ந்தார்.
அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது என்னையும், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பிற ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இரவுப்பணியில் வேலை செய்யவே பிற டிரைவர்கள் பயப்படுகின்றனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.