கோவை கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம்
கோவை:
இளைஞர்களைக் கொண்டு செயல்படும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ரத்ததானம் உட்படபல்வேறு பணிகளில் இந்த சங்கம் ஈடுபடும்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தை கோவை செஞ்சிலுவை சங்கச் செயலர் நந்தினி ரங்கசாமிதுவக்கி வைத்து பேசியதாவது:
ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரத்ததானம் வழங்க இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். செஞ்சிலுவை சங்கத்தின் மூலம்இத்தகைய உதவி கிடைத்தாலும், இளைஞர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும். இதற்காக இந்த சங்கம் துவங்கப்படுகிறது.
மேலும், விபத்து, வெள்ளம், தீ விபத்து, குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் சமயங்களில் மக்களுக்கு உதவ இளைஞர்களுக்குசெஞ்சிலுவைச் சங்கங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கும், மருத்துவ வசதி பெற இயலாதவர்களுக்கு உதவ இந்த இளைஞர்கள் அமைப்பு முன்வரும் என்றார். கல்லூரிமுதல்வர் கோபால், திட்ட அலுவலர் ரங்கசாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications