காஷ்மீர்: இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் 10 பாகிஸ்தானிய வீரர்கள் சாவு
ஜம்மு:
காஷ்மீரில் இந்தியத் துருப்புக்கள் நடத்தி பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர்10 பேரும் ஒரு காஷ்மீரி தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள நெளகாம் பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள்சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தின.
இத் தாக்குதலில் இந்திய அதிகாரியும் மூன்று வீரர்களும் பலியானார்கள். பலர்காயமடைந்தனர். இத் தாக்குதலை அடுத்து நெளகாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர்தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்களின் நடமாட்டம் இருந்து தெரிந்துஅவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர்.
புதன்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகொல்லப்பட்டார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications